Friday, October 18, 2013

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைரவர்!!!



திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன் கோவிலில் ஜடாமண்டல பைரவப் பெருமான் ஆட்சிபுரிந்து வருகிறார்.இவரது திருமுடி வட்டமாக(ஜடாமண்டலமாக) அமைந்திருக்கும்;நெற்றிப்பட்டம்,கண்டாபரணம்,ஏகருத்ராட்சம்,
ருத்ராட்சமாலை,நாக உதரபந்தம்,முப்புரிநூல்,கிங்கிணிமாலை ஆகிய அணிகலன்களுடன் இடுப்பின் கீழ் சுற்றி அமைந்த பாம்பும் விளங்குகிறது.
பின் கரங்களில் உடுக்கை,நாகம்,முன் கரங்களில் திரிசூலம்,கபால பாத்திரம் விளங்க விழித்த கோரப்பார்வையுடன் தெற்றிப்பற்களும்,நிர்வாணத் திருமேனியுடனும்,அழகுநிரம்பிய கலைஅம்சத்துடனும் காட்சியளித்துவருகிறார்.

தொடர்ந்து 12 உத்திரம் நட்சத்திரம் வரும் நாட்களில் இங்கே வந்து ஜடாமண்டல பைரவப் பெருமானை அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,அரகஜா,மரிக்கொழுந்து,பால் இவைகளுடன் அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யும் போது ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது பைரவ சஷ்டிக் கவசம் பாட வேண்டும்.

இதன்மூலமாக உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல சம்பத்துக்களையும் ஜடாமண்டல பைரவப் பெருமானால் பெறுவார்கள்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment