Monday, October 7, 2013

பைரவர் வழிபாட்டுப் பாடல்கள்





பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்(கந்த புராணம்)
தனம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற
உளம்பொலி காசிமேவும் உயிர்கள் செய்பாவமெல்லாம்
களம் பொலியாது தண்டங்கண்டற வொழிந்து முக்தி
வளம்பொலி வகைசெய் காலவயிரவற் கன்பு செய்வோம்(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்)
சீரார் மதி சடையும் திருநீரும் திருமுகமும் கூரார்ந்த
முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில் மிகும் காராரிந்த மேனி
பிறவியிலேயே வருமுன் காட்சி வாரார்
வளர் தெட்சிணகைலாச வடுக பைரவமே
வஞ்சகர் அஞ்சத்தக்க வாள் நகை வதனம் வாழி
வெஞ்சமத்து அசுரர் செற்ற வீர அட்டகாசம் வாழி
புஞ்சவல் இருள்வெல்லோதி பொறியினை அடக்கு நல்லார்
நெஞ்சகம் கவரா நிர்வாணக் கோலம் வாழி
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர்  கோல காலபைரவனாகி வேழம் உரித்து உமை
அஞ்சக்கண்டு ஒண்திருமேனி மணிவாய்விள்ள சிரித்தருள்
செய்தார் சேறைச் செந்நெறி செல்வனாரே(அப்பர் சுவாமிகள்)
 
 ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment