Monday, October 7, 2013

டி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்!!!




மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் துணை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஊர் டி.கல்லுப்பட்டி ஆகும்.இங்கிருந்து பேரையூர் செல்லும் வழியில் இரண்டு கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது தேவன்குறிச்சி ஆகும்.இங்கே மலையடிவாரத்தை ஒட்டி அமைந்திருக்கும் சிவாலயம் அக்னீஸ்வரர் ஆலயம் ஆகும்.மேற்கு நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும்.இங்கே செய்யப்படும் சிறு பரிகாரமும் உடனடியாக நற்பலன்களைத் தரும்.


இந்த கோவிலை ஒட்டி ஒரு குகை இருக்கிறது.இந்தக் குகை மண்மூடி இருக்கிறது.இந்த குகைக்குள்ளாக ஒரு சித்தர் இன்றும் தவம் செய்து வருகிறார்.தகுதியுள்ளவர்களுக்கு காட்சியளித்து வருகிறார்;கீழே இருப்பது அந்தக் குகையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.



இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் அபிஷேகமும்,ஆராதனைகளும் நடைபெற்றுவருகின்றன.இந்த யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செவ்வரளிமாலை,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளோடு வந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டு நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 16 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்துவர நமது தீராத பிரச்னைகள்,வழக்குகள்,சொத்துத் தகராறுகள் தீர்ந்துவிடும்.ஆனால்,ஒரே ஒரு நிபந்தனை இவரை வழிபட ஆரம்பித்தப்பின்னர்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மது,(மனைவியைத் தவிர) மற்ற மாதுவைத் தொடாமல் இருந்தால் விரைவான பலன்கள் கிடைக்கும்;பைரவரது தரிசனமும் கிட்டும்.இவர் அவ்வ்வளவு சக்தி வாய்ந்தவர் ஆவார்.மேலே இருக்கும் போட்டோவில் அவர் தான் இருக்கிறார்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment