Sunday, November 3, 2013

பைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி!!!




ஆன்மீகக்கடலின் அத்தனை பதிவுகளையும் வாசித்துவிட்டவர்கள் இந்தப்பதிவின் மூலமாக வழிகாட்டப்பட்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைப் பின்பற்றலாம்.மற்றவர்கள் தயவு செய்து மட்டுமல்ல;அருள் கூர்ந்து ஆன்மீகக்கடலின் 2008 ஆம் ஆண்டின் முதல் பதிவிலிருந்து இன்றைய பதிவு வரை அனைத்தையும் வாசித்துவிட்டு பிறகு செயலில் இறங்கவும்.
ஒரு புதிய திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சீனுக்கு வந்தால் எப்படி இருக்கும்? அதைப்போலவே,இந்தப் பதிவினை வாசித்தால் நீங்கள் அதுபோன்ற உணர்வை எட்டுவீர்கள்.பழைய மற்றும் நீண்டகால வாசக,வாசகிகளுக்காக நமது ஆன்மீக குருவும்,பல ஆன்மீக விருதுகள் பெற்றவரும்,மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்காலச் சீடருமான திரு.சிவமாரியப்பன் அவர்களிடம் பலமுறை வலியுறுத்தி வேண்டி, இந்தப் பதிவினை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீகால பைரவரின் அருள் சுலபமாக நமக்குக் கிடைக்கவும்,நமது முற்பிறவி கர்மாக்கள் முழுமையாக விலகவும் தொடர்ந்து ஆறு பைரவ சஷ்டி நாட்களில் இந்த ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும் முன்பு நாம் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட வேண்டும்;முறையற்ற உறவு இருந்தால் அதையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.இந்த இரண்டையும் கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே ஸ்ரீகால பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்.இந்த வழிபாட்டை 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும்.
உங்கள் ஊரில் இருக்கும் பழைமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவரின் சன்னதிக்கு தொடர்ந்து ஆறு தேய்பிறை சஷ்டிகளுக்கு பின்வரும் பொருட்களை வாங்கிக்கொண்டு  செல்ல வேண்டும். அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை போன்றவைகளுடன் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும்.(நண்பர்கள் சேர்ந்து கூட்டாகவும் செய்யலாம்)அபிஷேகம் முடிந்ததும்,உங்கள் குடும்பத்தாரின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.


ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியின் போதும் இவ்வாறு அபிஷேகம் முடிந்தப்பின்னர்,அந்தக்  கோவிலின் வாசலில் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.இவ்வாறு அன்னதானம் செய்து முடித்தப்பின்னர்,நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக்கோவிலுக்கோ/பிறரது வீடுகளுக்கோ செல்லக் கூடாது.



அடுத்து வர இருக்கும் தேய்பிறை சஷ்டிகளும்,அந்த நாட்களில் வர இருக்கும் ராகு காலமும்:-
4.11.12 ஞாயிறு காலை 11.10 முதல் 5.11.12 திங்கள் மதியம் 12.30 வரை(4.11.12 ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை அல்லது 5.11.12 திங்கள் காலை 7.30 முதல் 9 வரை)
4.12.12 செவ்வாய்(மதியம் 3 முதல் 4.30க்குள்)
3.1.13 வியாழன் இரவு 7.02 வரை(மதியம் 1.30 முதல் 3 வரை)
1.2.13 வெள்ளி காலை 9.12 முதல் 2.2.13 சனி காலை 7.40 வரை(.1.2.13 வெள்ளி காலை 10.30 முதல் 12 வரை)
2.3.13 சனி இரவு 8.42 முதல் 3.3.13 ஞாயிறு மாலை 6.34 வரை(3.3.13 ஞாயிறு மாலை 4.30 முதல் 6 வரை)
3.4.13 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)
இவை நந்தன வருடத்தின் தேய்பிறை சஷ்டிகள் ஆகும்.அடுத்து வரும் விஜய ஆண்டின் தேய்பிறை சஷ்டி நாட்கள் ஜனவரி 2013 இல் நமது ஆன்மீகக்கடலில் வெளியாகும்.


இந்த ஆறு தேய்பிறை சஷ்டிகளில் தொடர்ந்து ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து முடித்தால்,அதன்பிறகு நமது மன உளைச்சல்கள் தீர்ந்திருக்கும்.நமது நீண்டகாலப்பிரச்னைகள் தீர்வதற்கு வழி கிடைத்திருக்கும்.சிலருக்கு கனவில் ஸ்ரீகாலபைரவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும் என்பது அனுபவ உண்மை ஆகும்.


வீட்டில் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் இந்த வழிபாட்டு முறையைப்பின்பற்றலாம்.
வீட்டில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களும் இந்த வழிபாட்டுமுறையைப்பின்பற்ற எந்தத் தடையும் இல்லை;
அவரவர் சொந்த ஊர்களில் இருக்கும் புராதனமான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் இந்த வழிபாட்டைப்பின்பற்றினாலே போதுமானது;ஒரு எச்சரிக்கை:எந்த கோவிலில் தேய்பிறை சஷ்டிக்கு ஸ்ரீகால பைரவரை வழிபட  ஆரம்பிக்கிறோமோ அந்தக் கோவிலில் மட்டுமே ஆறு தேய்பிறை சஷ்டிக்கும்  சென்று வழிபாடு செய்ய வேண்டும்;கோவிலை மாற்றினால் எதிர்விளைவு ஏற்படும்.
முடிந்தால்,ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அட்டவீரட்டானங்களில் ஏதாவது ஒரு வீரட்டானத்திற்குச் சென்று ஆறு தேய்பிறை சஷ்டிக்கும் இவ்வாறு வழிபாடு செய்தால்,கிடைக்கும் புண்ணியப்பலன்களை விளக்க இந்த ஒரு ஆன்மீகக்கடல் போதாது;
மயிலாடுதுறையிலும் அதைச் சுற்றிலும் இருப்பவர்கள் வழுவூர் வீரட்டானம்,கொறுக்கை வீரட்டானம்,திருப்பறியலூர் வீரட்டானம் இவைகளில் ஏதாவது ஒரு வீரட்டானத்தில் வழிபாடு செய்யலாம்.
திருவாரூர் மற்றும் அதன் அருகில் வசிப்பவர்கள் திருவிற்குடி வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
தஞ்சாவூர் மற்றும் அதன் அருகில் வாழ்ந்து வருபவர்கள் திருக்கண்டியூர் வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
பண்ருட்டி மற்றும் அதன் அருகில் இருப்பவர்கள் திருவதிகை வீரட்டானத்தில் இந்த வழிபாட்டையும்,திரு அண்ணாமலைக்கு அருகில் இருப்பவர்கள் திருக்கோவிலூர் வீரட்டானத்திலும் இந்த வழிபாட்டை பின்பற்றலாம்.
நாகை மாவட்டத்தில் வசிப்பவர்கள் திருக்கடையூர் வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைப்பின்பற்றலாம்.
 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ


No comments:

Post a Comment